மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது
மது விற்ற 3 பேர் கைது
Published on

களியக்காவிளை:

களியக்காவிளை இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழித்துறை பரம்புவிளையை சேர்ந்த ரகுவரன் (வயது 72), படந்தாலுமூடு மேலகாட்டுவிளையைச் சேர்ந்த சரண் (33), பாறசாலை ஐங்காமத்தைச் சேர்ந்த வில்சன் (62) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 16 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com