மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்தாய், மகன் உள்பட 3 பேர் படுகாயம்

பரமத்திவேலூரில் மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தாய், மகன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்தாய், மகன் உள்பட 3 பேர் படுகாயம்
Published on

பரமத்திவேலூர்

மொபட் மீது மோதல்

கரூர் மாவட்டம், தளவாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சந்திரகலா (வயது 37). இவர்களுக்கு ராகுல் (10) என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் சந்திரகலா தனது மகன் ராகுலை மொபட்டில் அழைத்துக்கொண்டு பரமத்திவேலூரில் உள்ள தனியார் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூமிற்கு தவணை தொகை கட்டுவதற்காக வந்துள்ளார்.

பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் ஷோரூம் செல்ல சந்திரகலா மொபட்டில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பரமத்தியில் இருந்து வேலூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற மொபட் மீது மோதியுள்ளது. இதில் சந்திரகலா மற்றும் அவரது மகன் ராகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த பரமத்தியை சேர்ந்த சக்திவேல் மகன் அரவிந்த் (23) படுகாயம் அடைந்து பரமத்திவேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com