

சிவகங்கை,
கொரோனா பரவல் காரணமாக சிவகங்கை மார்க்கமாக செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரெயில் ஆகியவை கடந்த மே மாதத்தின் முதல் வாரத்தில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் இந்த 3 ரெயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சேது எக்ஸ்பிரஸ் இன்று இரவு 8 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுகிறது. அதே போல் திருச்சியில் இருந்து சிவகங்கை வழியாக ராமேஸ்வரம் வரை செல்லும் பயணிகள் ரெயில், காலை 7 மணிக்கு புறப்பட்டது. ஊரடங்கிற்கு இடையில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ரெயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.