விழுப்புரத்தில் 30 லிட்டர் சாராயம் பறிமுதல்

விழுப்புரத்தில் 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரத்தில் 30 லிட்டர் சாராயம் பறிமுதல்
Published on

விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் உள்ள சரண்ராஜ் என்பவரின் வீட்டின் அருகே சிறு, சிறு பாக்கெட்டுகளில் 30 லிட்டர் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சரண்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com