காரில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் காரில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
காரில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
Published on

கும்பகோணம்:

கும்பகோணத்தில் காரில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

ரகசிய தகவல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் கும்பகோணம் போலீசார் ரகசியமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கும்பகோணம் புறவழிச்சாலை வழியாக காரில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

காரில் சோதனை

இதை தொடர்ந்து கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சந்தேகப்படும் வகையில் வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை 300 கிலோ இருந்தது.

பின்னர் காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பட்டீஸ்வரம் சில்வர் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 40) என்பதும், அவர் காரில் புகையில பொருட்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 300 கிலோ புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com