தொடர் விடுமுறையையொட்டி 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தொடர் விடுமுறையையொட்டி 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குனர் மோகன் கூறினார்.
தொடர் விடுமுறையையொட்டி 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தொடர் விடுமுறையையொட்டி 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குனர் மோகன் கூறினார்.

சிறப்பு பஸ்கள்

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், வருகிற 28-ந்தேதி (மிலாடிநபி), 30-ந்தேதி (சனிக்கிழமை), 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), 2-ந்தேதி காந்திஜெயந்தி) ஆகிய தொடர் விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருச்சி கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 200 பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 பஸ்கள் என கூடுதலாக 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

முன்பதிவு

விடுமுறைக்கு ஊருக்கு வந்த பயணிகள் மீண்டும் திரும்ப செல்ல 2-ந்தேதி (திங்கட்கிழமை), 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் 200 சிறப்பு பஸ்கள், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும்இயக்க விரிவான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. 2, 3-ந்தேதிகளில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. முக்கிய நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள் பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com