பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 316 மனுக்கள் பெறப்பட்டன

சேலத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 316 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 316 மனுக்கள் பெறப்பட்டன
Published on

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர்களிடம் கலெக்டர் நேரிடையாக சென்று மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மயில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com