பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 338 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 338 மனுக்கள் பெறப்பட்டன
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 338 மனுக்கள் பெறப்பட்டன
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 311 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று 27 மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.

பின்னர் இ்ந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கலெக்டர் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் கணக்கீடு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 6 பேருக்கு பாராட்டு சான்று வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, மாவட்ட சமூக நலத்துறை தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com