பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 339 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 339 மனுக்கள் பெறப்பட்டன
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 339 மனுக்கள் பெறப்பட்டன
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயபாபு தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று அவர்களிடமிருந்து 17 மனுக்களை பெற்றுக்கொண்ட வருவாய் அதிகாரி விஜயபாபு தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், ஏரி, குளம் தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 322 மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் இந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com