எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முதற்கட்டமாக ரூ.352 கோடி ஒதுக்கீடு

எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு முதற்கட்டமாக 352கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முதற்கட்டமாக ரூ.352 கோடி ஒதுக்கீடு
Published on

சென்னை

தமிழகத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுடைய தொகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள்.

2021-2022 நிதியாண்டுக்கான மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், 2021-2022 நிதியாண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவீதத்தை, அதாவது 352 கோடி ரூபாய் விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com