மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம் - கமல்ஹாசன் டுவிட்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு, தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம் - கமல்ஹாசன் டுவிட்
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாவது ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு, செயலால் நன்றியை காட்டுவேம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

பல கேள்விகள்,சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை,முழு பலம்,என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியை சொல்லிலின்றி,தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com