திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் 4 தொகுதி இடைத்தேர்தலில் மனுதாக்கல் முடிந்தது 221 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை
இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளில் நேற்றுடன் மனுதாக்கல் முடிந்தது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.