சட்ட விதிகளை மீறி செயல்பட்டதாக 4 கவுன்சிலர்கள் நீக்கம்

மாநகரட்சிகளில் 3 கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியில் இரு கவுன்சிலர்கள், தாம்பரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் ஆகியோர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக, 4 கவுன்சிலர்கள் நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையின் 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரத்தில் 40-வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11-வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com