4 நாட்கள் சுற்றுப்பயணம்.. நாளை மதுரையில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் நாளை முதல் 4 நாட்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 4-வது கட்ட பயணத்தை நாளை (1-ந் தேதி) மதுரையில் இருந்து தொடங்குகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலையில் மதுரை வருகிறார்.

வேலம்மாள் மருத்துவக்கல்லூரி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் பேசுகிறார். 6.30 மணிக்கு திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் பேசுகிறார்.

2-ந் தேதி காலை மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடுகிறார். அன்று மாலை 5 மணிக்கு மேலூர் பஸ் நிலையத்திலும், மாலை 6.30 மணிக்கு ஒத்தக்கடை பகுதியிலும், இரவு 8 மணிக்கு புதூர் பஸ் நிலையத்திலும் பேசுகிறார்.

3-ந் தேதி மாலை 5 மணிக்கு பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் பகுதியிலும், மாலை 6.30 மணிக்கு டி.எம்.கோர்டு பகுதியிலும், இரவு 8 மணிக்கு தினமணி தியேட்டர் பகுதியிலும், 4-ந் தேதி மாலை 5 மணிக்கு வாடிப்பட்டி பஸ் நிலையம் பகுதியிலும், இரவு 7 மணிக்கு உசிலம்பட்டி தி.விளக்கு பகுதியிலும் என 10 தொகுதிகளிலும் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com