அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா வரும் செப்டம்பர் 15-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அண்ணா சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி செப்டம்பர் 15, 16, 17, 19 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், மதுரை மாநாட்டின் தீர்மானங்களை விளக்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். மேலும் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com