பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை

திருப்பூர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பல்லடம் அருகே இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொலைக்கான நோக்கம் என்ன? கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com