கடலூரில் 4 மாத கர்ப்பிணி மூச்சுத்திணறி சாவு

கடலூரில் 4 மாத கர்ப்பிணி மூச்சுத்திணறி உயிழந்தா.
கடலூரில் 4 மாத கர்ப்பிணி மூச்சுத்திணறி சாவு
Published on

கடலூர் அருகே புருகீஸ்பேட்டை மேலவீதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மனைவி கல்பனா (வயது 33). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கல்பனா 4 மாத கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் கல்பனா கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் கடலூர் கோண்டூரில் வாடகை வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு சளி அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடன் அவரை அக்கம், பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி ரவிக்குமார் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com