புளிய மரத்தில் கார் மோதி 4 பேர் படுகாயம்

மொரப்பூர் அருகே புளிய மரத்தில் கார் மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
புளிய மரத்தில் கார் மோதி 4 பேர் படுகாயம்
Published on

மொரப்பூர்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார் (வயது 39), அருள் (35), கோகுல்நாத் (24), மனோஜ் பிரபாகரன் (26) ஆகிய 4 பேரும் ஒகேனக்கல்லுக்கு காரில் சுற்றுலா வந்தனர். நேற்று காலை அவர்கள் மொரப்பூர் கசியம்பட்டி அருகே வந்த போது கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் செந்தில்குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com