சென்னை மெரினா கடற்கரையில் 4 கற்சிலைகள் கண்டெடுப்பு.!

ரோந்து பணியில் இருந்த போலீசார் சிலைகளை மீட்டு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் 4 கற்சிலைகள் கண்டெடுப்பு.!
Published on

சென்னை,

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் 4 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. ரோந்து பணியில் இருந்த போலீசார் சிலைகளை மீட்டு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

கோயில்களில் இருக்கும் பழைய கற்சிலைகளை அகற்றி புதிய சிலைகளை அமைக்கும் போது ஆகம விதிப்படி பழைய கற்சிலைகளை நீர்நிலைகளில் வீசுவது வழக்கம். அதுபோல் யாரும் செய்தார்களா? அல்லது வேறு யார் வீசினார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com