கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
Published on

திங்கள்சந்தை:

இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் கீழகட்டிமாங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை பிடித்து சாதனையிட்டனர். அவர்களிடம் கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜெரின் (வயது21), ஜெரிஷ் (21), டேவிட் (22), முகமது அப்சல் (22) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள், 2 கார் மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com