தமிழ்நாட்டில் 40 சதவீதம் டிரைவர்கள் பற்றாக்குறை: வடமாநில ஆட்களை தேர்வு செய்ய முடிவு

வடமாநிலங்களில் இருந்து ஆட்களை தேர்வு செய்ய தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 40 சதவீதம் டிரைவர்கள் பற்றாக்குறை: வடமாநில ஆட்களை தேர்வு செய்ய முடிவு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 3 கோடியே 80 லட்சம் எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இயங்குகின்றன. அதில், இருக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 3 கோடியே 20 லட்சம் அடக்கம்.

வாடகை கார்கள், வேன்கள் மட்டுமே 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன.

4 சக்கர வாகனங்கள் இவ்வளவு இருந்தும் தமிழக போக்குவரத்து துறையில் டிரைவர்களாக பதிவு செய்துள்ளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 12 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது. இவ்வாறு பதிவு செய்தவர்களில் அரசு பஸ் டிரைவர்களும் அடங்குவார்கள்.

இதைவைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் டிரைவர்கள் பற்றாக்குறை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உள்ளது. குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் கார்கள், வேன்கள் இயக்க டிரைவர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில், 12 பேர் வரை பயணிக்கும் வாகனங்களை இயக்க, தனியாக பேட்ஜ் எனும் சிறப்பு உரிமம் பெறும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது. ஆனால், இது அவசியமில்லை என்று மத்திய அரசு உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் இங்கே நடைமுறைப்படுத்தவில்லை. இதை அமல்படுத்தினாலே டிரைவர்கள் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும் என்று சுற்றுலா வாகன சங்கத்தினர் கூறுகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தில் நிலவும் டிரைவர்கள் பற்றாக்குறையை சமாளிக்க வடமாநிலங்களில் இருந்து ஆட்களை தேர்வு செய்ய தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். அசாம், அருணாச்சலபிரதேச மாநிலங்களில் இருந்து போதிய பயிற்சி பெற்ற டிரைவர்களை தேர்வு செய்து அழைத்து வந்து பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com