அரசு பள்ளிகளில் 44 ஆயிரம் மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கை

கடந்த 2-ந் தேதி தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
அரசு பள்ளிகளில் 44 ஆயிரம் மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கை
Published on

சென்னை,

தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2025-26 கல்வியாண்டில் 3 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இந்த கல்வியாண்டில் (2026-27) மாணவர் சேர்க்கையை 5 லட்சமாக உயர்த்த தொடக்க கல்வித் துறை சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, அரசு பள்ளிகளில் ஏப்ரல் மாதத்தில்தான் மாணவர் சேர்க்கை தொடங்கும். தற்போது, தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அரசு பள்ளிகளிலும் மார்ச் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. அந்த வகையில், கடந்த 2-ந் தேதி தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

5 வயது பூர்த்தியான குழந்தைகள் பற்றிய விவரங்களை தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அங்கன்வாடிகளில் சேகரித்து, வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்த்துள்ளனர். இதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த 20 நாட்களில் 44,396 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com