

தூத்துக்குடி கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் கெத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 32), அங்குள்ள மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் முத்துலட்சுமி வீட்டை சாத்தி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்பேது பீரேவில் இருந்த 4.5 சவரன் நகை மற்றும் ரூ.4,500 பணம் திருடு பேயிருந்தது. இதுகுறித்து அவர் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.