தமிழகம் முழுவதும் கொரோனாவால் 4,920 போலீசார் பாதிப்பு: உயர் அதிகாரிகள் 240 பேருக்கு தொற்று

தமிழகம் முழுவதும் கொரோனாவால் 4,920 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயர் அதிகாரிகள் 240 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் 4,920 போலீசார் பாதிப்பு: உயர் அதிகாரிகள் 240 பேருக்கு தொற்று
Published on

சென்னை,

சென்னை போலீசில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1,920 ஆக இருந்தது. நேற்று ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,941 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில் நேற்று 13 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். குணம் அடைந்து பணிக்கு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,583 ஆக உயர்ந்தது. தமிழகம் முழுவதும் போலீஸ் துறையில் 4,920 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் உயர் போலீஸ் அதிகாரிகள் மட்டும் 240 பேர் கொரோனா தொற்றை தொட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com