226 பெண்கள் உள்பட தமிழகத்தில் 498 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று புதிதாக 272 ஆண்கள், 226 பெண்கள் என மொத்தம் 498 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
226 பெண்கள் உள்பட தமிழகத்தில் 498 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 272 ஆண்கள், 226 பெண்கள் என மொத்தம் 498 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 106 பேர், கோவையில் 48 பேர், செங்கல்பட்டில் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. அவற்றை தவிற அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 109 முதியவர்களும் அடங்குவர். தொற்றுக்கு ஆளான 498 பேரில் 457 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 995 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 346 பேரும், கோவையில் 465 பேரும், செங்கல்பட்டில் 327 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com