விவசாயி கொலையில் 5 பேர் கைது

நெல்லை அருகே விவசாயி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி கொலையில் 5 பேர் கைது
Published on

சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38), விவசாயி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை அருகே தருவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வந்த கணேசனை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேரன்மாதேவியில் மாரியம்மாள் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக கணேசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு உத்தரவின் பெயரில் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கொலை வழக்கில் தொடர்புடைய சேரன்மாதேவியை சேர்ந்த குத்தாலம் (55), மாரியப்பன் (52), ராஜ்குமார் (29), சதீஷ் (26), முருகசெல்வம் என்ற செல்லா (25) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com