தமிழகம் வந்தடைந்த 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்

புனேவில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 64 லட்சத்து 26 ஆயிரத்து 860 தடுப்பூசிகள் வந்து உள்ளன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்று மத்திய சுகாதார துறை அதிகாரிகளிடம் தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கும்படி வலியுறுத்தினார். இதையடுத்து 3 தினங்களில் தமிழகத்துக்கு 15 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு புனேவில் இருந்து பெங்களூரு வழியாக 42 பெட்டிகளில் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. விமான நிலையத்தில் இருந்து அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

சென்னை வந்த தடுப்பூசிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com