சவர்மா சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி - புதுக்கோட்டையில் பரபரப்பு

சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
சவர்மா சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி - புதுக்கோட்டையில் பரபரப்பு
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் நடத்தி வரும் கடையில் ஒரு குடும்பத்தினர் சவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அங்கிருந்த 7 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டையில் உள்ள பிற சவர்மா கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com