நாகல்கேணியில் ஹெராயின் விற்ற 5 பேர் கைது

நாகல்கேணியில் ஹெராயின் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்,
நாகல்கேணியில் ஹெராயின் விற்ற 5 பேர் கைது
Published on

சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி அண்ணா சாலை, பழைய லெதர் கம்பெனி அருகே வடமாநில இளைஞர் ஒருவர் போதை பொருள் விற்பதாக சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஷேக் அஸ்மத் (வயது 24) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு கிராம் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தி.நகர், பாரதி நகரில் தங்கியிருந்த டோபி உசேன் (23), தில்வான் உசேன் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக குரோம்பேட்டையில் தங்கியிருந்த ரசீதுல் இஸ்லாம் (29), மணா (26) ஆகியோரிடமிருந்து ஹெராயின் பறிமுதல் செய்தனர். போதைப்பொருளை விற்றதாக 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 48 கிராம் ஹெராயின், 4 செல்போன், இருசக்கர வாகனம், 2,300 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com