நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: உடனுக்குடன் 5 மாநில தேர்தல் முடிவுகள்.. புதிய இணையதள முகவரி வெளியீடு

5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி (நாளை மறுநாள்) திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: உடனுக்குடன் 5 மாநில தேர்தல் முடிவுகள்.. புதிய இணையதள முகவரி வெளியீடு
Published on

சென்னை,

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி (நாளை மறுநாள்) திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் 85 சதவீத வாக்குப்பதிவும், புதுச்சேரியில் 90 சதவீத வாக்குப்பதிவும், கேரள மாநிலத்தில் 78 சதவீத வாக்குப்பதிவும், அசாம் மாநிலத்தில் 85 சதவீத வாக்குப்பதிவும், மேற்கு வங்காளத்தில் முதல் கட்டத்தில் 93 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 92 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் இந்த 5 மாநில தேர்தல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் பிரத்யேகமாக https://results.cci.gov.in/ என்ற இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் வருகிற 4-ந் தேதி காலை 8 மணி முதல் 5 மாநில தேர்தல் முடிவுகளை தனித் தனி யாக உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

இது தவிர 'ECINET' மற்றும் 'Voter Helpline' என்ற செல்போன் செயலிகள் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என் பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com