சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை சிறைவிதிக்கப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
Published on

ஆற்காடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறைவிதிக்கப்பட்டது.

காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்ற அப்பு (வயது 24). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஆற்காட்டில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வந்துள்ளார். அதேபோல் காட்பாடி பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் 6 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு அதே திருமணத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது அந்த சிறுமிக்கு வாலிபர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறி நடந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்த வழக்கு வேலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளை விசாரிக்கும் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com