

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த மதிவாணன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 27), சுப்பிரமணியன் மகன் அருண்குமார்(25), அந்தோனி செலஸ்டின் செட்டி மகன் திமோராஜ்குட்டி(28), இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து(27), முருகன் மகன் முத்துகுமார்(எ) ரீகன்(24) ஆகிய 5 பேரும் நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து சரக்கு குற்றவாளிகள்" ஆவர்.
மேற்சொன்ன 5 பேரும் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.