மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 5,400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

சென்னையை சேர்ந்த 2 பயணிகளை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 5,400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
Published on

சென்னை,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று காலை பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி இருவரிடம் நடத்திய சோதனையில், அவர்கள் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டியில் இருந்த 5,400 சிவப்புக் காது அலங்கார நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.

ஆமை கடத்தலில் ஈடுபட்ட 2 பயணிகளை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, சென்னையை சேர்ந்த ரமேஷ் ஆகாஷ், தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய இருவரும் சுற்றுலாப் பயணிகளாக, மலேசியா சென்று விட்டு திரும்பி வந்தது தெரியவந்தது.

அத்துடன் கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகளை மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் அதற்கான செலவுகள் அனைத்தையும் கடத்திக் கொண்டு வந்த பயணியிடமே வசூலிக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வகை சிவப்புக் காது அலங்கார நட்சத்திர ஆமைகள் தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை பெரிய பங்களாக்களில் அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். மேலும் மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com