ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 6 பேர் விடுதலை - சரத்குமார் வரவேற்பு

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 6 பேர் விடுதலை - சரத்குமார் வரவேற்பு
Published on

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு விடுவித்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல, சுபரீம் கோர்ட்டுக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் இவர்கள் 6 பேரையும் விடுவித்திருப்பது, பேரறிவாளன் விடுதலையின் போதே எதிர்பார்த்த ஒன்று தான்.

கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்கனவே எதிர்பார்த்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மனதார ஏற்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com