

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 படித்தவுடனே சி.ஏ. என்று சொல்லப்படும் பட்டய கணக்காளர் படிப்பிற்கு 2 ஆயிரம் மாணவர்கள் சிறப்பு பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மதுரை, திருநெல்வேலி, வேலூர், திருச்சி, கோவை, சென்னை ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
மாணவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படும். ஐ.சி.டி. திட்டத்தின் கீழ் 8 முதல் 12-ம் வகுப்பு வரை 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அறை அமைத்து தரப்படும். இந்த திட்டத்தை சென்னையில் நாளை (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.