புதிதாக கட்டப்பட்ட 608 அடுக்குமாடி குடியிருப்புகள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சிவகங்கையை அடுத்த பையூர்பிள்ளைவயல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள் பெற விரும்பும் சிவகங்கை பகுதியை சேர்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
புதிதாக கட்டப்பட்ட 608 அடுக்குமாடி குடியிருப்புகள்
Published on

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சிவகங்கையை அடுத்த பையூர்பிள்ளைவயல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள் பெற விரும்பும் சிவகங்கை பகுதியை சேர்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்

608 அடுக்குமாடி குடியிருப்புகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொறுப்பு மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மதுரைக்கோட்டத்தின் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் சிவகங்கையை அடுத்த பையூர் பிள்ளைவயல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 608 அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் சிவகங்கை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சிறப்பு முகாம்

மேலும், நகர்ப்புறத்தில் வசிக்கும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்கு முன்னுரிமை அளித்து குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் பெற விரும்பும் சிவகங்கையை பகுதியை சேர்ந்தவர்கள்; 1) இந்தியாவில் தனது பெயரிலோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை எனவும் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்கு மிகாமலும் உள்ளது எனவும் சான்றளிக்க வேண்டும். இங்கு வீடுகள் பெற விரும்புவர்கள் குடும்பத்தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பிள்ளைவயல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதி, சிவகங்கை என்ற முகவரியில் வருகிற 29-ந்தேதி மற்றும் 30-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4. மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆவணங்கள்

இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் ரூ.5 ஆயிரத்துக்கு கேட்பு காசோலை Executive Engineer PIU Madurai என்ற பெயரில் எடுத்து பயனாளியின் ஆதார்நகல் (கணவன் மற்றும் மனைவி), வண்ணப்புகைப்படம் - 2 எண்ணம், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை மனுவுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தொகையானது பயனாளியின் பங்களிப்புத் தொகையில் வரவு வைக்கப்பட்டு மீதத்தொகையினை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com