இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.6 கிலோ தங்கம் சிவகங்கையில் பறிமுதல் - இருவர் கைது

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.6 கிலோ தங்கத்தை சிவகங்கையில் பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 நபர்களை கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.6 கிலோ தங்கம் சிவகங்கையில் பறிமுதல் - இருவர் கைது
Published on

சிவகங்கை,

இலங்கையில் இருந்து நாட்டுப் படகுகளை பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டம் வழியாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மதுரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு காரில் வந்த 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த காரை சோதனை செய்தபோது, அதில் 6.6 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கீழக்கரையைச் சேர்ந்த சேகுசாதிக் மற்றும் சாதிக் அலி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.4.56 கோடி என தெரியவந்துள்ளது. அவர்கள் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com