

சென்னை,
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, நிலநிர்வாக இணை ஆணையராக எஸ்.செந்தாமரை ஐ.ஏ.எஸ்., பொதுப்பணித்துறை இணை செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார், வேளாண்மை துறை கூடுதல் இயக்குநராக பதவி வகித்து வரும் எம்.அருணா, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் ஜதாவத், வேளாண்மை துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக பதவி வகித்துவரும் ஜே. ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை இணை செயலாளராக பதவி வகித்து வரும் ஏ. ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணை செயலாளராக பதவி வகித்து வரும் எம்.லஷ்மி, சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.