லாரி, கார் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம்

தொப்பூர் கணவாயில் லாரி, கார் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம் அடைந்தனர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
லாரி, கார் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம்
Published on

நல்லம்பள்ளி:

மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு பிளாஸ்டிக் குரனை ஏற்றி கொண்டு ஒரு லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை வந்தது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரசாத் (வயது 39) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவாக திருநாவுக்கரசு (47) என்பவர் உடன் வந்தார். அப்போது தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மற்றும் கார் மீது மோதியது.

இதில் கார் தர்மபுரி- சேலம் சாலையில் கவிழ்ந்தும், லாரி எதிர்திசை சாலையில் கவிழ்ந்தும் விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர்கள் பிரசாத், திருநாவுக்கரசு மற்றும் காரில் வந்த மாணிக்கம் (57) உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சுங்கச்சாவடி ரோந்து படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சாலையின் இருபுறமும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான 3 வாகனங்களும் அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

=======

படம் உண்டு

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com