தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதை கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதை பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதை கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மறைமலைநகர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட திருக்கச்சூர் மாடவீதி தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மகள் நந்தினி (வயது 13), திருக்கச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நந்தினி சமீபத்தில் நடந்த பள்ளி தேர்வில் ஒரு சில பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் நந்தினியை கண்டித்துள்ளனர்.

இதில் மன வருத்தத்தில் இருந்த நந்தினி நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பினார்.

பின்னர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய நந்தியினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மையிலேயே மாணவி குறைவான மதிப்பெண் எடுத்ததற்கு பெற்றோர் திட்டியதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குறைவான மதிப்பெண் எடுத்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருக்கச்சூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com