

ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள பெகிலி என்ற ஊரில், மண்ணுக்குள் பாதி புதையுண்ட நிலையில் மற்றும் மரங்களால் சூழப்பட்ட நிலையில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான பிற்காலச் சோழர் கால கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்த கோவிலை காமன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரிகம் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ஜெயலட்சுமி கண்டுபிடித்துள்ளார்.
இந்த் கோவில் வரலாற்றுப் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அரசும் தொல்லியல் துறையும் விரைவில் ஆய்வுப் பணிகளை முன்னெடுக்க உள்ளனர்.