வீட்டில் பதுங்கிய 10 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது

செங்கோட்டை அருகே வீட்டில் பதுங்கிய 10 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது.
வீட்டில் பதுங்கிய 10 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள தெற்கு மேடு கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. விவசாயியான இவரது வீட்டில் வாசல் பக்கம் இரும்பு பீரோவில் துணிகளை வைத்து உள்ளார். நேற்று காலையில் மாடசாமி பிரோவை திறக்க முயன்றபோது பீரோவிற்கு அடியில் ஏதோ சத்தம் வந்தது. அவர் பார்த்தபோது, ராஜநாகம் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு அலுவலர் செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com