புதுக்கோட்டையில் லாரி மீது பைக் மோதி விபத்து - 2 பேர் பலி


புதுக்கோட்டையில் லாரி மீது பைக் மோதி விபத்து - 2 பேர் பலி
x

லாரி ஓட்டுநரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவராமன் என்ற இளைஞரும், அவரது உறவினருமான அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படித்து வந்த அறிவுக்கரசு என்ற சிறுவனும் மார்க்கெட்டில் பைக்கில் சென்று காய்கறிகள் வாங்கி வந்தனர். பின்பு இருவரும், அரசு மருத்துவமனை எதிரில் சாலையைக் கடக்க முயன்ற போது, சாலையில் மறுபுறத்தில் வந்த லாரியின் பக்கவாட்டில் இவர்களின் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் சதீஷ் கண்ணன் என்பவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story