குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர்

குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது
குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர்
Published on

சிவகாசி, 

சிவகாசி ரெயில் நிலையம் அருகில் செல்லும் எஸ்.என்.புரம் ரோட்டின் ஓரத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் மூலம் செல்லும் தண்ணீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் உடைப்பு சரி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com