திருவாரூரில் பள்ளி மாணவர்கள் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழந்த சோகம்

கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரில் பள்ளி மாணவர்கள் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழந்த சோகம்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்த நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் உலகநாதனை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com