இடப்பிரச்சினையில் வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

இடப்பிரச்சினையில் வாலிபரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இடப்பிரச்சினையில் வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு
Published on

விக்கிரமங்கலம்:

விக்கிரமங்கலம் அருகே அறக்கட்டளை கிராமம் மேலத் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மகன் ராஜ்குமார்(வயது 19). அதே பகுதியை சேர்ந்த அய்யப்பனின் மகன் காந்தி(20). இவர்கள் 2 பரின் குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ராஜ்குமார் தனது விவசாய நிலத்திற்கு உழுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காந்தி இடப்பிரச்சினை சம்பந்தமாக ராஜ்குமாரிடம் பேசியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் காந்தி, ராஜ்குமாரை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காந்தியை தேடி வருகிறார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com