

காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மேல காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே ரோந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, காவிரிஆற்றில் இருந்து மொபட்டில் மணல் மூட்டைகளை எம்.புத்தூரை சேர்ந்த வினோத்குமார் என்பவர் கடத்தி வந்துள்ளார். போலீசார் மொபட்டுன் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.