சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
Published on

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தமிழக முதல்-அமைச்சரின் தலைமையில் வருகிற ஆகஸ்டு 10-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொள்ளும் போதை பொருள் தடுப்பு மாநாடு குறித்தும், வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com