கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு

நத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு
Published on

நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் ராமாயி. இவரது பசுமாடு ஒன்று நேற்று முன்தினம் இரவு பொய்யாம்பட்டி பகுதியில் உள்ள சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள், கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com