கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
Published on

மங்கலம்பேட்டை

மங்கலம்பேட்டை ஷேக் நகரைச் சேர்ந்தவர் வனத்தையன்(வயது 50). இவரது பசுமாடு நேற்று காலை அதேபகுதியில் மேய்ச்சலுக்கு சென்றபோது அப்பகுதியில் இருந்த 50 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் தவறி விழுந்தது. இதுபற்றிய தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஒருமணிநேரம் போராடி பசுமாட்டை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com